ஆராய்ச்சி பயிற்சி பட்டறை!

ஆராய்ச்சி பயிற்சி பட்டறை!

Share it if you like it

ஆராய்ச்சி முறை குறித்த பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள தொழில்முறை ஆராய்ச்சியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

சேலம் மாவட்டம் வாழப்பாடியிலுள்ள சி.ஏ.ஏ.எஸ். ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் சங்கமம் கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து ஆராய்ச்சி முறை குறித்த பயிற்சி பட்டறையை நடத்துகின்றன. 75 ஆண்டுகளாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றங்களின் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து இந்த ஆராய்ச்சி முறை குறித்த பயிற்சி பட்டறை நடைபெறுகிறது. இந்த ஆராய்ச்சி முறை குறித்த பயிற்சி பட்டறை சேலம் மாவட்டம் வாழப்பாடி சேஷஞ்சாவடியிலுள்ள சி.ஏ.ஏ.எஸ். ஆராய்ச்சி அறக்கட்டளையில் நடைபெறவுள்ளது. மார்ச் 29, 30-ம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்த பயிற்சி பட்டறையில் 21 தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில், 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து 96 ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டு, தங்களது அரசியல் பார்வைகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து விளக்குகிறார்கள். இதில், தொழில்முறை ஆராய்ச்சியாளர்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it