அசர்பஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்றும் உலக போட்டி போட்டியில் 206 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இத்தொடரின் காலிறுதி போட்டியில் சக இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியுடன் பிரக்ஞானந்தா மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.உலகக் கோப்பை செஸ் போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறிய 2-வது வீரர் என்ற பெருமையையும் அவர் பிடித்துள்ளார்.அரையிறுதி சுற்றில் உலகின் 3-நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் பிரக்ஞானந்தா விளையாட உள்ளார்.