3- நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

3- நாள் பயணமாக டெல்லி சென்றார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

Share it if you like it

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் அண்மையில் தெரிவித்திருந்தார். மாணவர்கள் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளாக உருவாவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்திற்குமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் ஆளுநரின் நிலைப்பாட்டை எதிர்த்து திமுக வரும் 20-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3- நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.


Share it if you like it