அத்து மீறும் பாக்., அடித்து நொறுக்கும் இந்தியா

அத்து மீறும் பாக்., அடித்து நொறுக்கும் இந்தியா

Share it if you like it

ஸ்ரீநகர்,
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் இருந்து வருகின்றன.  காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் சார்பில் அவ்வப்பொழுது அத்துமீறிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.  இதற்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் தங்தார் மற்றும் கன்ஜல்வான் பிரிவுகளில் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இதே போன்று இன்று காலை 7.15 மணி அளவில் மான்கோட் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம், இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டது. கேரி பாட்டல், சுந்தர்பானி, மென்தார், கிருஷ்ணாகாட்டி, பூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த 5 இடங்களிலும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Share it if you like it