வடமாநில தொழிலாளியை தாக்கிய நபரை கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
ரயிலில் பயணம் மேற்கொண்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்களை தமிழர் ஒருவர் ஆபாசமாக திட்டியும், அடித்த காணொளி ஒன்று அண்மையில் இணையத்தில் வைரலாகி இருந்தது. அந்த நபரின் மலிவான செயலுக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில், தமிழக ரயில்வே காவல்துறையினர், வடமாநிலத்தை சேர்ந்த நபரை தாக்கியவரை தேடி வருகின்றனர். மேலும், அதுகுறித்து தகவல் தெரிவிக்கும் நபருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.