இந்திய அணி நிதான ஆட்டம்

இந்திய அணி நிதான ஆட்டம்

Share it if you like it

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. முதலில் நடைபெற்ற இருபது ஓவர் தொடரை இந்திய அணி 2 – 0 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று சென்னை சின்னசாமி மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஆரம்பமே இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது மேற்கிந்திய தீவுகள்.

ராகுல் 6 ரன்களிலும் கேப்டன் விராட் கோலி 4 ரன்களிலும் அவுட்டாகி வெறியேறினர். ரோஹித் சர்மா மட்டும் சிறிதுநேரம் தாக்குபிடித்தார். அவரும் 36 ரன்களுக்கு அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் பார்ட்னரும் எதிரணி கேப்டனுமான போலார்ட்  இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தற்போது இந்திய அணி 26 ஓவர்களுக்கு 111 ரன்கள் எடுத்து ஆடிவருகின்றது. ரிஷப் பன்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் களத்தில் உள்ளனர். 


Share it if you like it