இரண்டு மணிநேரத்தில் 13.03 % ஓட்டுகள் பதிவு

இரண்டு மணிநேரத்தில் 13.03 % ஓட்டுகள் பதிவு

Share it if you like it

ஜார்க்கண்ட் சட்டசபைக்கான மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டமாக வாக்கு பதிவுகள் நடைபெறுகின்றன. இதற்கான முதற்கட்ட வாக்கு பதிவு கடந்த நவம்பர் 30ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து, டிசம்பர் 20ந்தேதி வரை வாக்கு பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23ந்தேதி நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

முதல் கட்டமாக 13 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற்றது. இந்நிலையில், 2வது கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதற்காக காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.வாக்காளர்கள் அதிக அளவில் வந்து தங்களது ஓட்டுகளை பதிவு செய்யும்படி பிரதமர் மோடி டுவிட்டரில் இன்று கேட்டு கொண்டார்.இந்நிலையில், ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தலுக்கான 2வது கட்ட ஓட்டு பதிவில் காலை 9 மணிவரை 13.03 % ஓட்டுகள் பதிவாகி உள்ளன.


Share it if you like it