எந்த மாநிலமும் CAA-வை நிராகரிக்கமுடியாது!

எந்த மாநிலமும் CAA-வை நிராகரிக்கமுடியாது!

Share it if you like it

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் முஸ்லிம் மதத்தினர் தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மத்திய அரசு இயற்றியுள்ள இந்த சட்டத்தை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றும் நமது நாட்டில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எந்த மாநிலமும் நிராகரிக்க முடியாது. நமது நாட்டின் உண்மையான குடிமக்களுக்கு எள் அளவு கூட பாதிப்பு இல்லை. அதனால் இந்த சட்டத்தில் யாரும் பயப்பட தேைவ இல்லை. முஸ்லிம் ஓட்டுகள் சென்றுவிடுமோ என்ற பயத்தில் காங்கிரஸ் கட்சியினர் முஸ்லிம் மக்களை திசை திருப்புகிறார்கள். இனி காங்கிரசாரின் நாடகம் எடுபடாது.

நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகிேயாரது ஆட்சி காலத்திலும் குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டது. அப்போது எந்த பிரச்சினையும் உண்டாகவில்லை. இப்போது பிரதமர் மோடி ஆட்சியில் மட்டும் அந்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவது ஏன்?. காங்கிரஸ் கட்சியின் தவறான பிரசாரத்தை தடுக்கவே, முஸ்லிம் மக்களுக்கு தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிரசாரத்தை பா.ஜனதா தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் 3 கோடி பேருக்கும், கர்நாடகத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய உள்ளோம். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. முஸ்லிம் மக்களுக்கு தெளிவு ஏற்படுத்தவே உண்மையை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.


Share it if you like it