ஒரு சாமியார் முதல்வரா என்று கருதினேன் ஆனால் உ.பி. தற்பொழுது வேகமாக வளர்கிறது – தமிழக பெண் அரசியல் விமர்சகர் கருத்து..!

ஒரு சாமியார் முதல்வரா என்று கருதினேன் ஆனால் உ.பி. தற்பொழுது வேகமாக வளர்கிறது – தமிழக பெண் அரசியல் விமர்சகர் கருத்து..!

Share it if you like it

உ.பி. முதல்வராக யோகி அறிவித்த பொழுது தமிழகத்தை சேர்ந்த சுப.வீ, மற்றும்  சில்லறை போராளிகள் முதல் பலரும் மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.. தமிழகத்தை சேர்ந்த பிரபல பெண் அரசியல் விமர்சகர் பானு கோம்ஸ் அவர்கள் தற்பொழுது யோகி குறித்து தான் தெரிவித்த கருத்தினை தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு வெளியிட்டுள்ளார்…

  • யோகியின் தலைமையில் …உ பி. வேகமாக வளர்கிறது. அதுவும் கூர்மையான திட்டமிடுதலோடு.. தேர்ந்தெடுத்த துறைகளில் வளர்கிறது. ‘அனைத்து மக்களுக்குமான’ கவனிக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
  • Encephalitis-ல் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை …பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. WHO-ம், CRY போன்ற அமைப்புகளும் பாராட்டுகளை குவிக்கின்றன.
  • ஏற்கனவே வளர்ந்து விட்டதையும், மெதுவாக வளர்ந்து கொண்டிருப்பதையும்… கீழ் இழுத்து வீழ்த்துவது அல்ல புரட்சி.! சுயநல அரசியலாலும், ஊழலாலும், காட்டாட்சியாலும் வீழ்ந்து கிடந்ததை மீட்டெடுத்து வளர்ச்சி அடைய வைப்பதே புரட்சி.
  • அந்த வகையில்..உ.பி. யை வளர்ச்சிப் பாதையை நோக்கி திருப்பி இருக்கும் முதல்வர் யோகி.. ஒரு புரட்சியாளர். அதிலும்…முற்போக்கு புரட்சியாளர்.
அன்று :
உ.பி முதல்வராக யோகி அறிவிக்கப்பட்ட போது …பெருமளவில் பலவாறாக சீரழிக்கப்பட்டுவிட்ட உ.பி. போன்ற மிகப் பெரிய மாநிலத்திற்கு… ஒரு சாமியாரை போய் முதல்வராக அறிவித்திருக்கிறார்களே..! என்று அவநம்பிக்கையுடன் நான் இட்ட பதிவு நினைவுக்கு வருகிறது.

 


Share it if you like it

3 thoughts on “ஒரு சாமியார் முதல்வரா என்று கருதினேன் ஆனால் உ.பி. தற்பொழுது வேகமாக வளர்கிறது – தமிழக பெண் அரசியல் விமர்சகர் கருத்து..!

  1. Explore with details of improvements made by UP Govt. unless its looks like the person holding and usingTorch light on day time at the open ground.

Comments are closed.