கம்யூனிஸ்டே காறி துப்பிய திராவிடம்!

கம்யூனிஸ்டே காறி துப்பிய திராவிடம்!

Share it if you like it

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி பெண்ணுரிமை பேசும் திராவிட இயக்கங்களால் பெண்களுக்கு சமத்துவம்,சமஉரிமை  கொடுக்க முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை என்று கூறியுள்ளார்.மேலும் தமிழ்நாட்டில் தான் அதிக வன்முறைகள், பாலியல்  தொல்லைகள் என்று என்னால் பலவற்றை கூறமுடியும். பிரச்னைகளை எடுத்துப் போராடுவதற்கான துணிச்சலை திராவிட இயக்கங்களால் பெண்களுக்குக் கொடுக்க முடியவில்லை. பெண்களின் எண்ணிக்கையை வெறும் இட ஓதுக்கீடாக மட்டுமில்லாமல் நடைமுறை ஆக்கப் பணிகளுக்கு அந்தப் பெண்கள் எங்கே இருக்கிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும். திராவிடக் கட்சிகளில் பெண்களை ஒதுக்கித்தான்  வைத்துள்ளனர். ஆண்கள் தான் அங்கே முன்னிலையில் உள்ளனர்.என்று விகடன் பத்திரிக்கைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

 


Share it if you like it