கேரள தங்க கடத்தல் வழக்கில்  திடீர் திருப்பம் – குற்றவாளி அப்ரூவர்

கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம் – குற்றவாளி அப்ரூவர்

Share it if you like it

கேரள தங்க கடத்தல் வழக்கின் நான்காவது குற்றவாளியான, சந்தீப் நாயர், அப்ரூவராக மாற விரும்புவதாக, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.’இந்த வழக்கு தொடர்பான தன் வாக்குமூலம், தனக்கு எதிரான ஆதாரமாகவும் எடுத்துக் கொள்ளப்படும் என்பது நன்கு தெரியும் இருந்தும் நான் அப்ரூவராக தயார். எனக்கு தெரிந்த விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க தயாராக உள்ளேன்’ என்று, அந்த மனுவில் தெரிவித்து உள்ளார். இந்த சந்தீப் நாயர் ரமீஸ் என்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் அவர் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் இதனால், தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது’


Share it if you like it