கைப்பிள்ளையாக மாறிய சீனா சிரிக்கும் உலக நாடுகள்…!

கைப்பிள்ளையாக மாறிய சீனா சிரிக்கும் உலக நாடுகள்…!

Share it if you like it

சர்வேதச சட்ட திட்டங்களுக்கு மதிப்பளிக்காமல், செய்து கொண்ட ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாலமல், இந்திய எல்லை பகுதியில் தொடர்ந்து வன்முறை போக்கையே மேற்கொண்டு வருகிறது சீனா. துணிச்சல் மிக்க இந்திய ராணுவ வீரர்கள் சீன நரி கூட்டத்தை இன்று வரை தும்சம் செய்து வருகின்றனர் என்பது நிதர்சனம்.

தனது தில்லு முள்ளு பாரத நாட்டிடம் எடுபடவில்லை என்பதால். 1962- ஆம் ஆண்டு பயன்படுத்திய ஒரு தந்திரத்தை தூசி தட்டி தற்பொழுது செயல்படுத்த முயற்சி செய்து வருகிறது சீனா. லடாக் பகுதியில் குளிர் காலம் தற்பொழுது நெருங்கி கொண்டு இருக்கிறது. எதற்கும் தயார் என்று இந்தியா களத்தில் நிற்கிறது. வல்லரசு நாடுகள் அனைத்தும் இந்தியாவின் பக்கம்.

போருக்கும் போக முடியாது, இந்திய நிலத்தை ஆக்கிரமிக்கவும்  முடியாது. அதனால் தனது எல்லை பகுதிக்கு உட்பட்ட இடத்தில் நின்று கொண்டு. பஞ்சாபி பாடலை அதிக சத்தமாக ஒலிக்க விட்டு. உங்களை எல்லாம் இந்தியா குளிரில் மிகவும் கஷ்டப்படுத்த போகிறது.

உங்களுக்கு எல்லாம் சூடான உணவு கிடைக்க போவதில்லை. நீங்கள் ஏன் கஷ்டப்படுகிறீர்கள், என்று ஒலி பெருக்கியில் சத்தமாக இந்திய ராணுவ வீரர்களை நோக்கி சீன ராணுவ வீரர்கள் பேசி வருகின்றனர். இச்செய்தி அறிந்த இந்தியா உட்பட உலக நாடுகள் சீன ராணுவத்தின் செயலை கண்டு சிரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/FrontalAssault1/status/1306815068521209859


Share it if you like it