செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குநனர்..! மத்திய அரசிற்கு கடிதம் எழுதிய – நடிகர் ரஜினிகாந்த்!

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குநனர்..! மத்திய அரசிற்கு கடிதம் எழுதிய – நடிகர் ரஜினிகாந்த்!

Share it if you like it

மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குநராக சந்திரசேகரனை நியமித்துள்ளதற்கு, சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அதே போல் பிரபல பத்திரிக்கையாளர் மாலன் நாராயணன் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

“திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழுக்குச் செய்யாததை மோடி அரசு செய்துள்ளது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு முழு நேர இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள இரா. சந்திரசேகரன் இரு முனைவர் பட்டங்களும் 4 முதுநிலைப்பட்டங்களும் பெற்றவர் மூன்றாண்டுகளுக்கு முழு நேர இயக்குநராக இருப்பார்”, என்று மாலன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it