டென்னிஸில் மோதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்

டென்னிஸில் மோதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்

Share it if you like it

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடையேறுவதாக இருந்த போட்டிகள், இந்தியாவின் கடும் எதிர்ப்பையடுத்து கஜகஸ்தானுக்கு மாற்றி சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டவருவதால் இந்தியா, பாகிஸ்தானுடனான உறவை துண்டித்தது. கிரிக்கெட்டில் கூட இருநாடுகளும் உலகக்கோப்பை போன்ற பொதுவான தொடர்களில் மட்டுமே விளையாடிவருகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுவதால் டேவிஸ் கோப்பை மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Share it if you like it