தொடரும் அவலம் கேட்க நாதியில்லை!

தொடரும் அவலம் கேட்க நாதியில்லை!

Share it if you like it

பாகிஸ்தானில் சமீப காலமாக சிறுபான்மையினராக வாழும் இந்து, கிருஸ்தவ மற்றும் சீக்கிய பெண்கள் கடத்திச் செல்லப்படுவதும், அவர்களை கட்டாய மதமாற்றம் செய்து முஸ்லீம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.நாளுக்கு நாள் இந்த அவலம் நீடித்தும் வருகிறது.. அந்த வகையில், சிந்து மாகாணம் மதியரி மாவட்டத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இஸ்லாம்பாத்தில் உள்ள ஹலா பகுதியை சேர்ந்தவர் கிஷோர் தாஸ். இவரது மகள் பாரதி .. 24 வயது பெண்.. இவர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்கள். இவரது மகள் பாரதிக்கு திருமணம் செய்ய மாப்பிளை பார்த்து திருமணத்திற்க்கு ஏற்பாடு செய்தனர்.

திருமண நாளன்று மணமேடையில் மாப்பிளை அமர்ந்திருக்க ஷாரு ஹுகுல் என்கிற இஸ்லாமிய இளைஞன் மணப்பெண்ணை கடத்தி சென்று அவரை கட்டாயப்படுத்தி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றியது மட்டுமல்லாமல் அவரது பெயரான பாரதியை புஷ்ரா என்று மாற்றி அப்புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டுள்ளான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பாரதியின் பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளனர்.


Share it if you like it