பாகிஸ்தானில் அக்கிரமம் -ஹிந்து சிறுமியை மிரட்டி மதமாற்றி திருமணம்!

பாகிஸ்தானில் அக்கிரமம் -ஹிந்து சிறுமியை மிரட்டி மதமாற்றி திருமணம்!

Share it if you like it

அண்டை நாடான பாகிஸ்தானில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். சிந்து மாகாணத்தில் ஹிந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர். இங்கு வசித்து வரும் விஜய குமார் என்பவர், போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் என் மகள், 11ம் வகுப்பு படித்து வந்தாள். சமீபத்தில், அலி ராஜா என்பவர், என் மகளை கடத்திச் சென்று, கட்டாயப்படுத்தி, முஸ்லிம் மதத்துக்கு மாற்றி, திருமணம் செய்தார். என் மகள், ‘மைனர்’ என்பதால், அலி ராஜாவிடமிருந்து மீட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக, கராச்சி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, விஜயகுமாரின் மகளை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். இதையடுத்து, இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை, அந்த பெண்ணை, கராச்சியில் உள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கும்படி, நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.


Share it if you like it