தர்பார் படத்துக்கு தடை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தர்பார் படத்துக்கு தடை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Share it if you like it

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். இந்தப் படம் ஜனவரி 9-ம் தேதி வெளியிடப்படும் என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், தர்பார் திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவை சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், “2.0 படத்திற்காக லைகா நிறுவனம் ரூ.12 கோடியை ஆண்டுக்கு 30 சதவீதம் வட்டிக்கு கடனாக பெற்றது. வட்டியுடன் சேர்த்து ரூ.23.70 கோடி வழங்கும் வரை தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கிற்கு, ஜனவரி 2 ஆம் தேதி லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது


Share it if you like it