வன்முறை என்றுமே பிரச்சனைக்கு தீர்வாகாது

வன்முறை என்றுமே பிரச்சனைக்கு தீர்வாகாது

Share it if you like it

வன்முறை என்றுமே பிரச்சனைக்கு தீர்வாகாது என்று நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல இடங்களில் வன்முறையாளர்களால் கலவரம் வெடித்துள்ளது. இது குறித்து தனது கருத்தை நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் “எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிட கூடாது. தேசபாதுகாப்பு மற்றும் நாட்டுநலனில் அக்கறைகொண்டு இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன், விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். இப்பொது நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று அதில் தெரிவித்துள்ளார்.


Share it if you like it