நடிகர் விஜய் ஆபீஸில் ஊழியர் மர்ம மரணம்!

நடிகர் விஜய் ஆபீஸில் ஊழியர் மர்ம மரணம்!

Share it if you like it

நடிகர் விஜய் அலுவலகத்தில் பணி புரிந்து வந்த ஒப்பந்த ஊழியர் மரணம் அடைந்து இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு, தமிழகத்தை தாண்டி பல்வேறு மாநிலங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில், தனது ரசிகர்களையும், கட்சியினரையும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் சந்திப்பதை வழக்கமாக கொண்டவர் நடிகர் விஜய். இப்படிப்பட்ட சூழலில், அலுவலகத்தின் உட்பகுதிகளை புதுமைப்படுத்தும் பணி அங்கு நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பெயிண்டர் பிரபாகரன் என்பவர் கடந்த ஒரு மாத காலமாக பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்த ஊழியராக அங்கு வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று தனது சம்பளத்தை பெற்று கொண்டு தன்னுடைய குடும்பத்தினரை பார்க்க சென்ற பிரபாகரன் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் குடிபோதையில் நடிகர் விஜய்யின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து, அங்கு இருந்த மேஸ்திரியிடம் தனக்கு பசிப்பதாகவும் புரோட்டா வாங்க 100 ரூபாய் தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. அந்தவகையில், மறுநாள் காலை அலுவலகத்தின் உள்பகுதியில் கையிலும், வாயிலும் புரோட்டாவுடன் மர்மமான முறையில் பிரபாகரன் உயிர் இழந்துள்ளார். இதனை அறிந்து கடும் அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் காவல்துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், தகவல் அறிந்து வந்த கானத்தூர் காவல்துறையினர் பிரபாகரன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், குடிபோதையில் புரோட்டா சாப்பிட்டதால் அது மூச்சு குழாய் வழியாக சென்று நுரையீரல் பாதையை அடைத்து விட்டதால் மூச்சு விட முடியாமல் பிரபாகரன் உயிர் இழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Share it if you like it