குழந்தைகளை கொடுமைப்படுத்தி ராணுவ பயிற்சி கொடுக்கும் சீனா; வாய் திறப்பாரா அருணன்?

குழந்தைகளை கொடுமைப்படுத்தி ராணுவ பயிற்சி கொடுக்கும் சீனா; வாய் திறப்பாரா அருணன்?

Share it if you like it

அக்னிபத்திற்கு பொங்கிய அருணன் சீனாவின் அடாவடி தனத்திற்கு பொங்குவாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவரது, பாராட்டை பெற்றவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அருணன். இவர், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர். அந்த வகையில், இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்த போது சீனாவிற்கு ஆதரவாக முட்டு கொடுத்து ட்விட்டரில் பதிவிட்டவர். அவரின் ட்விட்டர் பதிவு இதோ :

கொரோனா வைரஸ் இயற்கையில் பிறந்தது, மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது அல்ல என்கிறார்கள் விஞ்ஞானிகள்-sciencenews.org. அதை “சீன வைரஸ்” எனும் டிரம்புக்கும், அவரது சிங்கிகளாகிய சங்கிகளுக்கும் இது சமர்ப்பணம் என குறிப்பிட்டு இருந்தார்.

இப்படியாக, அருணனின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இதனிடையே, நாட்டு நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு, அருணன், சுந்தரவள்ளி, கனகராஜ் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தான், சர்வதேச சட்டத்திட்டங்களை மதிக்காமல் சீனா தனது நாட்டை சேர்ந்த குழந்தைகளுக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளித்திருக்கிறது.

இந்த காணொளிதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அக்னிபத் திட்டத்திற்கு பொங்கிய அருணன் இதற்கு பொங்குவாரா? என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

ஆரணியில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Share it if you like it