பிரதமரை பிரமிப்பில் ஆழ்த்திய பா.ஜ.க தலைவர்!

பிரதமரை பிரமிப்பில் ஆழ்த்திய பா.ஜ.க தலைவர்!

Share it if you like it

பாரதப் பிரதமரை தெலுங்கானா பா.ஜ.க தலைவர் பிரமிப்பில் ஆழ்த்திய காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தெலுங்கானா மாநில பா.ஜ.க தலைவராக இருப்பவர் பண்டி சஞ்சய் குமார். இவர், கரிம் நகர் நாடாளுமன்ற உறுப்பினருமாகவும் இருந்து வருகிறார். அந்தவகையில், பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு கூட்டம் ஐதராபாத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் மிக முக்கிய தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, பா.ஜ.க மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார் தலைமையில் பரேட் மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இக்கூட்டத்தில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாரதப் பிரதமர் மோடி உள்ளிட்ட மிக முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அந்தவகையில், பரேட் மைதானத்தில் தெலுங்கானா வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய கூட்டத்தினை கூட்டி பிரதமர் மோடியை பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it