கோவிலில் உண்டியல் வச்சு பிச்சை எடுப்பது அரசுதான்: அர்ச்சகர்களோ பூஜாரிகளோ அல்ல – பொன்மாணிக்கவேல் பாய்ச்சல்!

கோவிலில் உண்டியல் வச்சு பிச்சை எடுப்பது அரசுதான்: அர்ச்சகர்களோ பூஜாரிகளோ அல்ல – பொன்மாணிக்கவேல் பாய்ச்சல்!

Share it if you like it

கோவிலில் உண்டியல் வைத்து பிச்சை எடுப்பது அரசுதான் அர்ச்சகர்கள் அல்ல என்று பொன்மணிக்கவேல் பேசியிருக்கும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் உலக சிவனடியார்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில், மதுரை ஆதீனம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் மற்றும் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். இதயைடுத்து, மாஜி அதிகாரி பேசும் போது இவ்வாறு கூறினார் ;

தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை தேவையற்றது. பக்தர்கள் உண்டியல்களில் பணத்தை போடாதீர்கள். வாழ்வாதாரமின்றி வறுமையில் தவிக்கும் அர்ச்சகர்களின் தட்டில் பணத்தை போடுங்கள். ஆண்டவன் தான் அதிகாரிகளுக்கு பிச்சை போட வேண்டும். அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ ஆண்டவனுக்கு பிச்சை போட முடியாது. கோவில்களில் உள்ள கல்வெட்டுகளில் இருந்து அரசு அதிகாரிகளின் பெயர்களை உடனே நீக்க வேண்டும்.

சென்னை அருங்காட்சியகத்தில் 2,500-க்கும் மேற்பட்ட புராதானமான சுவாமி சிலைகள் உள்ளன. அச்சிலைகளை, ஆகம விதிபடி மீண்டும் அதே கோவில்களில் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபட அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். இதனை, செய்யுமாறு அரசாங்கத்திற்கு நாம் மனு கொடுக்க கூடாது. அது தெய்வத்தை இழிவுப்படுத்துவது போல அமைந்து விடும். அரசே முன்வந்து இதனை செய்ய வேண்டும். ஒரு சர்வே நடத்தியதில், அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 26,000 கோவில்களில் பூஜை செய்ய அர்ச்சகர்களே இருக்க மாட்டார்கள் என்ற பகீர் தகவலை கூறியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அவர் பேசிய காணொளி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it