காங்கிரஸ் கட்சியின் இருபெரும் தலைவர்களின் ஆதரவாளர்களிடையே வார்த்தை போர் ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ்-க்கு ஆதரவாக வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து, கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நான்தான் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறி வருகிறார். அதே வேளையில், அடுத்த முதல்வர் நான்தான் என அக்கட்சியின் மூத்த தலைவர் டி.கே. சிவகுமார் கூறி வருகிறார். அதற்கு, வலுசேர்க்கும் விதமாக இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தள பக்கங்களில் மோதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.