பஞ்சாப் மாநிலத்தில் உள்ளபோலாத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்பால் சிங் கைரா. இவர் ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2015 ஆம் பதியப்பட்ட போதை பொருள் தொடர்பான வழக்கில் சுக்பால் சிங்க கைரா கைது செய்யப்பட்டார். சன்டீகரில் உள்ள வீட்டில் அவர் கைது செய்யப்ட்ட போது, அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். மேலும் இந்த கைது ஆம் ஆத்மி ஆட்சியின் கைது நடவடிக்கை என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.