அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – பா.ஜ.க. வலியுறுத்தல்!

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – பா.ஜ.க. வலியுறுத்தல்!

Share it if you like it

அமைச்சர் செஞ்சி மஸ்தானை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மரக்காணம் அருகே கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு மரூர் ராஜா என்பவர் தான் காரணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. தி.மு.க. அமைச்சர் திரு. செஞ்சி மஸ்தானுடன் மரூர் ராஜா மிக நெருக்கமாக இருந்துள்ளார். ஏன்? இதற்காகத் தான் திரு.செஞ்சி மஸ்தானை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக பா.ஜ.க. முன்வைத்துள்ளது. நடவடிக்கை எடுப்பீரா திரு. ஸ்டாலின் அவர்களே என பதிவிட்டுள்ளார்.


Share it if you like it