காலி சேர்கள்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சியுரை!

காலி சேர்கள்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சியுரை!

Share it if you like it

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டு இருக்கும் போது பொதுமக்கள் கலைந்து சென்ற காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், மதுரையில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச துவங்கினார். அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களில் பலர் சாரை சாரையாக கலைந்து சென்றனர். இதனை துளியும் பொருட்படுத்தாமல் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டு இருந்தார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it