‘ஸ்டாலின்தான் வாராரு…பேப்பரை திங்க வைக்க போறாரு!

‘ஸ்டாலின்தான் வாராரு…பேப்பரை திங்க வைக்க போறாரு!

Share it if you like it

நான் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வருவேன் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறினார். எனினும், தமிழகத்தில் மதுபிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில், விடியல் ஆட்சி அமைந்து 2 வருடங்களை வெகுவிரைவில் நிறைவு செய்ய உள்ளது. எனினும், பூரண மதுவிலக்கு நடைமுறைக்கு வரவில்லை. தி.மு.க. தலைவர் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளில் மதுவிலக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திற்கு, விடியலை தருவேன் என்று கூறியவர் ஸ்டாலின். ஆனால், தற்போதைய ஆட்சியில் நடைபெறும் சம்பவங்களை வைத்து பார்க்கும் போது, இருண்ட காலத்தை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

தமிழகத்தில், கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதன்காணரணமாக, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அதே வேளையில், பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். இப்படியாக, தமிழகத்தில் சமூக சீர்கேடு தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இப்படிப்பட்ட சூழலில், அரசு மதுபான கடைக்கு சென்ற மதுபிரியர் ஒருவருக்கு போதை தலைக்கு ஏறியுள்ளது. இதையடுத்து, அவர் பிளாஸ்டிக் மேஜையின் மீது இருந்த பேப்பரை சைடிஸ் என்று நினைத்து கொண்டு தின்றுள்ளார். இதனை, யாரோ ஒருவர் காணொளியாக பதிவு செய்து அதனை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த, காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it