அப்பாவிகளின் சொத்தை அபகரிக்க முயற்சி… தீ குளிக்க முயன்ற 5 குடும்பம்!

அப்பாவிகளின் சொத்தை அபகரிக்க முயற்சி… தீ குளிக்க முயன்ற 5 குடும்பம்!

Share it if you like it

ஆ. ராசாவின் அண்ணன் தங்களது சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீ குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், தமிழக மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், சட்டம் ஒழுங்கு இருந்து வருகிறது. இதுதவிர, ஏழை எளியவர்களின் சொத்துக்களை கழக கண்மணிகள் தொடர்ந்து அபகரித்து வருகின்றனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மக்கள் பேசிய காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் மூத்த தலைவர் மற்றும் நீலகிரி எம்.பி.யுமாக இருப்பவர் ஆ. ராசா. இவரது, அண்ணன் சலவை தொழிலாளியின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் வீடுகளை அபகரிக்க முயற்சி செய்து இருக்கிறார். இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற வேதனையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்று இருக்கின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்தான, காணொளியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it