பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை:  டி.கே.சிவகுமார் அடம்!

பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை: டி.கே.சிவகுமார் அடம்!

Share it if you like it

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதல்வர் கூறியிருப்பது தமிழக மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

நாங்கள், ஆட்சிக்கு வந்தால் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என அண்மையில் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. இதையடுத்து, கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், “தண்ணீருக்காக நாங்கள் பாதயாத்திரை மேற்கொண்டிருக்கிறோம். பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” “தமிழ்நாடு இந்த விவகாரத்தை சகோதரத்துவத்துடன் அணுக வேண்டும் என கூறியிருக்கிறார். கர்நாடக துணை முதல்வரின் இந்த கருத்து தமிழக மக்களிடையே மீண்டும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it