அமித்ஷாவுக்கு அபத்தமான கடிதம்… ஸ்டாலினை கலாய்த்த அண்ணாமலை!

அமித்ஷாவுக்கு அபத்தமான கடிதம்… ஸ்டாலினை கலாய்த்த அண்ணாமலை!

Share it if you like it

அமுல் நிறுவனத்துக்கு எழுத வேண்டிய கடிதத்தை, அமித்ஷாவுக்கு எழுதி இருப்பதாகக் கூறி ஸ்டாலினை கலாய்த்திருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

அமுல் நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவி இருக்கிறது. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டிருக்கிறது. எனவே, இதை தடுக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

இதைத்தான் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலாய்த்திருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “பள்ளியில் மாணவர்கள் லீவு வேண்டுமானால், குறிப்பிட்ட வகுப்பறையின் ஆசிரியருக்குத்தான் லீவு லெட்டர் எழுத வேண்டும். அதைவிடுத்து, பள்ளியின் சேர்மனுக்கு லீவு லெட்டர் எழுதலாமா? அதுபோல, அமுல் நிறுவனம் குஜராத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனம். அதற்கென நிர்வாகம் உண்டு. அப்படி இருக்க, நேராக அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் ஸ்டாலின். நல்லவேளை மோடிக்கு கடிதம் எழுதவில்லை” என்று கூறி பங்கம் செய்திருக்கிறார் அண்ணாமலை.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it