சிரிக்காம எப்புடி அக்கா காமெடி பண்றீங்க!

சிரிக்காம எப்புடி அக்கா காமெடி பண்றீங்க!

Share it if you like it

கருணாநிதியின் சாதனைகள் குறித்து தி.மு.க ஐ.டி. பிரிவின் துணைச் செயலாளர் பேசிய காணொளி நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.

தி.மு.க.வை சேர்ந்தவர் பத்ம பிரியா. இவர், அக்கட்சியின் ஐ.டி. பிரிவின் துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவர், பா.ஜ.க.விற்கும், தி.மு.க.விற்கும் உள்ள வித்தியாசம் இதுதாங்க என்று அண்மையில் பேசிய காணொளியில் இவ்வாறு கூறியிருந்தார் : நம்ம எல்லாருக்கும் புழுக்கமாக இருக்கு. இந்த விஷயத்தை பா.ஜ.க.விடம் சொன்னால் ரூ. 10,000 கோடி ஒதுக்கி ஏ.சி. போடு என்று சொல்வார்கள். இதே, விஷயத்தை தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் சொன்னால் சுற்றி நான்கு மரங்களை நட்டுவை என்று சொல்வார். இதுதான், நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என கூறியிருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கருணாநிதியின் பிறந்த நாளான இன்று அவர் பேசிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காணொளிதான் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it