அரியலூரில் மற்றொரு லாக்கப் மரணம்?

அரியலூரில் மற்றொரு லாக்கப் மரணம்?

Share it if you like it

தமிழகத்தில் தொடர்ந்து லாக்கப் மரணங்கள் நிகழ்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அமைந்த பின்பு லாக்கப் தொடர்பான மரணங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழக மக்களிடம் உண்மையை எடுத்துகூற வேண்டிய ஊடகங்கள், பத்திரிகைகள் தி.மு.க. ஆட்சி என்பதால் வழக்கம் போல கள்ள மெளனமாக இருந்து வருகின்றன. இதனிடையே, ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவர் (வயது 21) மணிகண்டன். இவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் பயின்று வந்த மாணவர். கல்லூரியை முடித்து விட்டு வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வாகன பரிசோதனையில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் அவரது வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.

இதையடுத்து, மாணவர் தனது பைக்கை சில மீட்டர் தூரம் தள்ளி நிறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், சினம் கொண்ட காவல்துறையினர் மாணவனை நடுரோட்டில் போட்டு அடித்து உதைத்து உள்ளனர். இதனை தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கேயும் அவர் மீது கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். இதையடுத்து, மணிகண்டனின் பெற்றோரை காவல்துறையினர் தொடர்பு கொண்டு உங்கள் மகனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து, வீட்டிற்கு சென்ற மாணவன் மாலையில் ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்த அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இதனை தொடர்ந்து, சென்னனை பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்தவர் (25) விக்னேஷ். இவர், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 19.4.2022 அன்று காவல்துறையினர் விசாரணையின் போது மரணம் அடைந்தார். தி.மு.க. ஆட்சி என்பதால் வி.சி.க. தலைவர் திருமாவளவன் வழக்கம் போல கப்சிப்.

அதேபோல, சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் செங்குன்றத்தை சேர்ந்த விசாரணை கைதி ராஜசேகர் என்பவர் மரணம் அடைந்தார். இவ்வாறாக, தொடர்ந்து விடியல் ஆட்சியில் லாக்கப் மரணங்கள் நிகழ்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், பாமக மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞருமான பாலு கலியபெருமாள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அரியலூர் மாவட்டம் தா-பழூர் ஒன்றியம் காசங்கோட்டை கிராமத்தில் விக்ரமங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த எட்டு பேர் கொண்ட போலீசார் நடத்திய தாக்குதலில் செம்புலிங்கம் என்பவர் மரணம் வழக்கு பதிவு செய்து நீதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை, தி.மு.க ஆட்சியில் 7 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அந்தவகையில், ராஜசேகர் மரணம் அமைந்துள்ளது. தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கண்ட்ரோலில் இல்லை என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றச்சாட்டினை முன்வைத்து இருந்தார். அதனைமெய்ப்பிக்கும் வகையில், இது போன்ற லாக்கப் மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it