தி.மு.க.விடமிருந்த நகராட்சி துணைத் தலைவர் பதவியை பா.ஜ.க. கைப்பற்றி அசத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சி துணைத் தலைவராக இருந்தவர் மணி. இவர், தி.மு.க.வை சேர்ந்தவர். உடல் நலக்குறைவு காரணமாக இவர் அண்மையில் உயிர் இழந்தார். இதையடுத்து, அந்த பதவிக்கு நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. கவுன்சிலர் உன்னி கிருஷ்ணன் 12 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை, எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க.வை சேர்ந்த ஜெயசுதா வெறும் 8 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியை தழுவினார்.
இதையடுத்து, தி.மு.க.விடமிருந்த துணைத் தலைவர் பதவியை பா.ஜ.க. தற்போது கைப்பற்றி உள்ளது. இது, ஆளும் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.