தி.மு.க.வின் வளர்ப்பு இதுதாங்க: அண்ணாமலையின் தாயை பழித்த ஆபாச கட்சியின் மூத்த தலைவர்!

தி.மு.க.வின் வளர்ப்பு இதுதாங்க: அண்ணாமலையின் தாயை பழித்த ஆபாச கட்சியின் மூத்த தலைவர்!

Share it if you like it

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் தாயை தி.மு.க.வின் மூத்த ஆபாச பேச்சாளர்களின் ஒருவன் ஏகவசனத்தில் பேசியிருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், பெண்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் கவலைப்படும் நிலையில் இந்த ஆட்சி நகர்ந்து கொண்டு இருக்கிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

அந்த வகையில், சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் மேற்கு பகுதி தி.மு.க. சார்பில், பொதுக்கூட்டம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பேசிய தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக் என்பவன், நடிகைகளும், பா.ஜ.க. நிர்வாகிகளுமான குஷ்பு, நமீதா, கவுதமி ஆகியோரின் பெயர்களை சொல்லி, அவர்கள் ஐடங்கள் என்று அவதூறாகப் பேசியதோடு, குஷ்புவை தி.மு.க. நிர்வாகி ஒருவருடன் தொடர்புபடுத்தி கீழ்த்தரமாக பேசியிருந்தான்.

இதனிடையே, தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க.வை சேர்ந்த சசிகலா குறித்து தெரிவித்த கருத்து பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து, தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை அவள் என்று ஒருமையில் பேசி இருந்தார்.

இப்படியாக, பெண்கள் விடியல் ஆட்சியில் தொடர்ந்து இழிவுப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்தான், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் தாயை தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகி ஒருவன் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளான். இவன், மீது ஆளும் கட்சி நடவடிக்கை எடுக்குமா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it