பிரதமர் மோடி குறித்து திமிர் பதிவு: அமைச்சர் மனோ.தங்கராஜை பங்கம் செய்த பா.ஜ.க.வினர்!

பிரதமர் மோடி குறித்து திமிர் பதிவு: அமைச்சர் மனோ.தங்கராஜை பங்கம் செய்த பா.ஜ.க.வினர்!

Share it if you like it

பாரத பிரதமர் மோடி குறித்து, அமைச்சர் மனோ.தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு பா.ஜ.க.வினர் தரமான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் பார்லிமென்ட் கட்டடத்தை பாரத பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது, தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் 1947-ல் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோலை, புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் நிறுவினர் பிரதமர் மோடி. முன்னதாக, ஆதீனங்கள் வேத மந்திரங்கள் முழுங்க செங்கோலுக்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்த பிரதமர் மோடி, பின்னர் அச்செங்கோலை புதிய பார்லிமென்ட்டில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே நிறுவினார்.

இந்த நிலையில், செங்கோலுக்கு பிரதமர் மோடி சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்ததை கிண்டல் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் தி.மு.க. அமைச்சர் மனோ.தங்கராஜ். அப்பதிவில், மூச்சு இருக்கா? மானம்?? ரோஷம்??? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்குத்தான் பா.ஜ.க.வினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஒரு அமைச்சரின் தராதரம் இவ்வளவுதான் என்று சிலர் டீசென்ட்டாக விமர்சனம் செய்தனர். அதேசமயம், சமீபத்தில் உதவி கேட்டு வந்த விதவை பெண்ணை அமைச்சர் மனோ.தங்கராஜ் படுக்கைக்கு அழைத்த ஆடியோ வெளியானதை வைத்து, கழுவிக் கழுவி ஊற்றி வருவதோடு, சில தரமான சம்பவங்களையும் செய்து வருகின்றனர் பா.ஜ.க.வினர்.

Image

Share it if you like it