முருகக் கடவுளை பேச நீ யாரு? அமைச்சரை ரவுண்டு கட்டிய மக்கள்!

முருகக் கடவுளை பேச நீ யாரு? அமைச்சரை ரவுண்டு கட்டிய மக்கள்!

Share it if you like it

தமிழ் கடவுள் முருகனை பற்றி பேச தி.மு.க. அமைச்சருக்கு அருகதை இல்லை என்று பொதுமக்கள் சரமாரியாக விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

சமீபத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தமிழ்க் கடவுள் முருகனை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதாவது, முருகன் ஆண்மையை வளர்த்துக் கொள்வதற்காகவே தினை மாவை சாப்பிட்டு வந்தார். இதன் காரணமாகவே 2 மனைவிகளை திருமணம் செய்தார் என்று கூறியிருந்தார். இவரது பேச்சு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தவே, சும்மா ஜாலிக்கு கூறினேன் என்று சொல்லி சமாளித்தார்.

எனினும், அமைச்சரது பேச்சு ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் அமைச்சருக்கு பதிலடி கொடுத்தனர். இந்த சூழலில், அமைச்சரின் பேச்சு குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்று பொதுமக்களிடம் பேட்டி கண்டது. இதில் பேசிய மக்கள் பலரும், அமைச்சருக்கு எதிராக கொந்தளித்து விட்டனர். ஹிந்துக் கடவுள்களை பற்றி மட்டும்தான் தி.மு.க.வினரால் பேச முடியும். காரணம், ஹிந்துக்கள் சொரணை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

அதேசமயம், கிறிஸ்தவ கடவுள் பற்றியோ, இஸ்லாமிய கடவுள் பற்றியோ இவர்களால் இப்படி பேச முடியுமா? இந்நேரம் கதையை முடித்திருப்பார்கள். இவருக்கெல்லாம் அமைச்சர் பதவி கொடுத்ததே முட்டாள் தனம். உண்மையிலேயே ஹிந்து மதத்தை மதிக்கும் ஹிந்துவாக இருந்தால் இப்படியெல்லாம் பேசமாட்டார்கள். ஒட்டுமொத்தத்தில் ஹிந்து கடவுளை பற்றி பேச தி.மு.க.வினருக்கு அருகதையே கிடையாது என்று தங்களது குமுறலை கொட்டி இருக்கிறார்கள்.

வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…


Share it if you like it