ஹரியானாவில் கடந்த மாதம் 31-ஆம் தேதி விஸ்வ இந்து பரிஷத் நடத்திய பேரணியின் போது ஒரு கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரும் கலவரம் மூண்டது. இது தொடர்பாக 286 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கலவரத்திற்கு காரணமான நபரை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். அந்த நபர் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதலை நடத்தியதால், போலீசார் பதிலுக்கு சுட்டதில் அவர் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.