செங்கோலை கேலி செய்து வீடியோ… கிறிஸ்தவ மிஷனரிகள் அடாவடி!

செங்கோலை கேலி செய்து வீடியோ… கிறிஸ்தவ மிஷனரிகள் அடாவடி!

Share it if you like it

பார்லிமென்டில் வைக்கப்பட்டிருக்கும் செங்கோலை கேலி, கிண்டல் செய்து கிறிஸ்தவ மிஷனரிகள் வெளியிட்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஹிந்துக்களின் மனதை வேதனைப்படுத்தி இருக்கிறது.

டெல்லியில் புதிய பார்லிமென்ட் கட்டடம் கடந்த 28-ம் தேதி திறக்கப்பட்டது. இக்கட்டடத்தை திறந்து வைத்த பாரத பிரதமர் மோடி, பார்லிமென்டின் சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை நிறுவினர். இந்த செங்கோல், 1947-ம் ஆண்டு நேரு பிரதமராக பதவியேற்கும்போது, தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய தங்க செங்கோலாகும். இத்தனை ஆண்டுகளாக நேருவின் கைத்தடி என்று கூறி, அகமதாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவலறிந்த பிரதமர் மோடி, அச்செங்கோலை புதிய பார்லிமென்ட்டில் நிறுவி இருக்கிறார்.

இந்த செங்கோலை நிறுவியதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் போன்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், தமிழர்களுக்கு பெருமை சேர்க்கக் கூடிய இவ்விஷயத்திற்கு தமிழர்களே எதிர்ப்புத் தெரிவித்து வருவதுதான் வேடிக்கை. இந்த நிலையில்தான், செங்கோலை கேலி, கிண்டல் செய்து கிறிஸ்தவ மிஷனரிகள் வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் முன்புறம் கூடிய கிறிஸ்தவ மிஷனரி கும்பல், தென்னை மரத்தின் பாளையை கையில் வைத்துக் கொண்டு, இதுதான் செங்கோல் என்று கூறி, செங்கோலுக்கு மோடி மரியாதை செலுத்தியதை கேலி, கிண்டல் செய்தும், செங்கோலை அவமரியாதை செய்தும் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.

இதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், செங்கோலையும் பிரதமரையும் கிறிஸ்தவ மிஷனரிகள் அவமதித்த சம்பவம் ஹிந்துக்கள் மத்தியில் கொந்தளிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கண்ட கிறிஸ்தவ கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.


Share it if you like it