வெற்றிமாறனுக்கு பதிலடி கொடுத்த குஷ்பு!

வெற்றிமாறனுக்கு பதிலடி கொடுத்த குஷ்பு!

Share it if you like it

ராஜ ராஜ சோழன் குறித்து திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்து இருந்த கருத்திற்கு கடும் கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், நடிகை குஷ்பு தக்க பதிலடியை அவருக்கு கொடுத்து இருக்கிறார். இக்காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆடுகளம் பட இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். இதையடுத்து பேசிய அவர், திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்த விளைவு தான், தமிழ்நாடு இன்று வரை மதசார்பற்ற மாநிலமாக இருந்து வருகிறது. நடுவில் இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் இல்லாமல் இருந்தது. இப்போது, திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்துள்ளது. வள்ளுவருக்கு காவி உடை அணிவது ஆகட்டும். ராஜ ராஜ சோழன் ஒரு ஹிந்து அரசனாக காட்ட முயற்சி நடைபெறுகிறது என்று கூறியிருந்தார்.

வெற்றிமாறனின் இக்கருத்து பெரும் சர்ச்சையாக மாறியிருந்தது. இந்த நிலையில், பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் ; சாமி கும்பிடும் அனைவரும் சிவன், பெருமாள், கிருஷ்ணன் என்று அனைத்து கடவுளையும் ஒன்றாக கருதி வழிபடுகிறான். இறை நம்பிக்கையில்லாத நபர்களுக்கு என்ன பிரச்சனை. உனக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை. நீ ஹிந்து இல்லையே உனக்கு என்ன கவலை. இறை நம்பிக்கை மற்றும் தெய்வத்தை வணங்குபவன் அதுகுறித்து பேச வேண்டும். அவன்தான் அனைத்து மதங்களும், எல்லா தெய்வமும் ஒன்று என கருதி வழிபட்டு சென்று கொண்டு இருக்கிறான். நாத்திகம் பேசுபவன் ஹிந்து இல்லை என்றால், முதலில் நீ மனுஷனே இல்லையே. எவன் பிறரின், மதத்தை புண்படுத்துகிறானோ அவன் முதலில் மனுஷனே இல்லை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் பிரபல நடிகையுமான குஷ்பு, திரைப்பட இயக்குனர் வெற்றிமாறனுக்கு தக்க பதிலடியை இவ்வாறு கொடுத்து இருக்கிறார் ;

அவரவர் பார்க்கும் பார்வையில் தான் எல்லாம் இருக்கு. உலகம் உருண்டை என நாம் சொல்கிறோம். இல்லை, உலகம் சதுர வடிவில் இருப்பதாக சொன்னால் உங்களுக்கு அப்படிதான் தோணும். நீங்கள் உங்களது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் தவறு கண்டுபிடிப்பேன். அனைத்தையும், என்னுடைய பார்வையில் தான் பார்ப்பேன் உலகத்தோட பார்வையில் பார்க்க மாட்டேன் என்று கூறுவது அவருடைய துரதிருஷ்டம். நீங்கள் உங்களது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். உலகம் எப்படி இருக்கிறது என்று நீங்கள் பார்க்க வேண்டும் என நடிகை குஷ்பு தெரிவித்து இருக்கிறார்.


Share it if you like it