முஸ்லீம போடு..! பழிய RSSகாரன் மேல போடு..! கேரளாவில் CPM சேட்டைகள்

முஸ்லீம போடு..! பழிய RSSகாரன் மேல போடு..! கேரளாவில் CPM சேட்டைகள்

Share it if you like it

கேரளா: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கே.ராதாகிருஷ்ணன், ஒரு கொலை வழக்கில் விசாரணையில் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுறுத்தலுக்கு கீழ்ப்படியவில்லை என்பதால். கம்யூனிஸ்ட் அரசாங்கத்தாலும் அரசியல்வாதிகளாலும் எப்படி துன்புறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார் என்பதையும் முதல்வரை சந்திக்கச் சென்றபோது அவர் எப்படி தவறாக நடந்து கொண்டார் என்பதையும் பிரபல செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பெட்டியில் நினைவு கூர்ந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு முகமது ஃபசல் என்பவர் CPM கட்சியில் இருந்து விலகி, வேறு கட்சியில் இணைய முயற்சித்ததாகவும். இதனால் ஆத்திரம் அடைந்த CPM கட்சியினர் அவரை கொன்றுவிட்டு. RSS அமைப்பினர் குற்றவாளிகள் என்பது போல் FIR பதியும் படி, அவ்வழக்கை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி கே.ராதாகிருஷ்ணனை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களின் வற்புறுத்தலுக்கு பணியாத கே.ராதாகிருஷ்ணன் நேர்மையான முறையில் விசாரணையை நடத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆளும் CPM கட்சி, தலித் அதிகாரியை வன்கொடுமை செய்ததாக அவர் மீது பழிசுமத்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் நவம்பர் 25 அன்று பேட்டியளித்திருந்த கே.ராதாகிருஷ்ணன், சிபிஎம் கட்சிக்கு எதிராகப் பேசியதால் தன்னை அவர்கள் குறிவைத்துவிட்டதாகவும். “எப்போது வேண்டுமானாலும் என்னைக் கொன்றுவிடுவார்கள். என் விதியை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு முன் எனது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விரும்புகிறேன்,” என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் கே.ராதாகிருஷ்ணன் இன்று (நவம்பர் 26) கொச்சியில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்ததாக TNIE செய்தியாளர் ராம் தாஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.

Source _ OPindia


Share it if you like it