மாணவியிடம் சில்மிஷம்: சர்ச் ஊழியர் எஸ்கேப்!

மாணவியிடம் சில்மிஷம்: சர்ச் ஊழியர் எஸ்கேப்!

Share it if you like it

பிளஸ் 1 படிக்கும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சர்ச் ஊழியர் லாரன்ஸை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பம் அது. இக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த மாணவியின் குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுவது கூடல்நகரைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவருக்குத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, கடந்தாண்டு மேற்கண்ட குடும்பத்தின் வீட்டிற்குச் சென்ற லாரன்ஸ், தான் சர்ச்சில் பணிபுரிந்து வருவதோடு, வழக்கறிஞராக இருப்பதாகவும் கூறி அறிமுகமாகி இருக்கிறார்.

பின்னர், அவ்வப்போது அந்த ஏழை குடும்பத்தின் வீட்டிற்கு வந்து ஜெபம் செய்ததோடு, சில உதவிகளையும் லாரன்ஸ் செய்து வந்திருக்கிறார். இதனால், அக்குடும்பத்தினர் லாரன்ஸ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். இதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட லாரன்ஸ், மாணவியிடம் நெருங்கி பழகி இருக்கிறார். அப்போது, அந்த மாணவியுடன் சேர்ந்து போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்திருக்கிறார். நாளடைவில் அந்த போட்டோ மற்றும் வீடியோவை காட்டி, அச்சிறுமியிடம் பலமுறை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் லாரன்ஸின் தொல்லை பொறுக்க முடியாத மாணவி, தனது பெற்றோரிடம் விஷயத்தை கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா விசாரணையில், லாரன்ஸ் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, லாரன்ஸ் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்ததோடு, போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்தார். இதையறிந்த லாரன்ஸ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.


Share it if you like it