திருமண பந்தம் இன்னும் 50 ஆண்டுகள்தான்… ‘மீ டூ’ புகழ் வைரமுத்து சொல்லும் ஆருடம்!

திருமண பந்தம் இன்னும் 50 ஆண்டுகள்தான்… ‘மீ டூ’ புகழ் வைரமுத்து சொல்லும் ஆருடம்!

Share it if you like it

இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்கிற பந்தமே இருக்காது. திருமண பந்தத்தைத் தாண்டி மனித குலம் வேறொரு நாகரிகத்தை நோக்கி எட்டு வைக்கும் என்று மீ டூ புகழ் வைரமுத்து கூறியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பேசும் வைரமுத்து, “திருமணம் என்பது சமீப காலத்து நாகரீகம்தான். ஆணுக்கும் பெண்ணுக்குமான இந்த உறவு என்பது பந்தப்படுத்தப்பட்டதும், சட்டப்பூர்வமாக்கப்பட்டதும், ஒரு அரசமைப்புச் சட்டத்துக்குள் அகப்பட்டுக் கொண்டதுமான உறவு என்பது சிறிது காலம்தான். திருமண பந்தம் என்பது வெறும் 3,000 வருடத்துக்குள்தான் இருக்கும். தாலி வந்தது, திருமணம் வந்தது எல்லாம் 3,000 வருட பந்தம்தான்.

இந்த 3,000 வருடத்துக்கு நாகரீகம் இன்னும் 50 ஆண்டுகள் இருக்கலாம், 100 ஆண்டுகள் இருக்கலாம் அவ்வளவுதான். திருமணம் தனது கடைசி சுவாசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்கிற பந்தமே இருக்காது. திருமணத்தைத் தாண்டி மனித குலம் வேறொரு நாகரிகத்தை நோக்கி எட்டு வைக்கும்.

திருமணம் என்பது முற்றுகையிடப்பட்ட ஒரு கோட்டை. உள்ளே இருப்பவர்கள் வெளியே வர தவிக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல துடிக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார் மீ டூ புகழ் வைரமுத்து. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், திராவிடர்களுக்கு திருமணம் என்றாலே அலர்ஜி போல் தெரிகிறது. சுப.வீரபாண்டியன் கள்ளத்தொடர்பை திருமணம் தாண்டிய உறவு என்று கூறுகிறார். வைரமுத்துவோ திருமணமே கூடாது என்கிறார்.

இவர்கள் தமிழர் கலாசாரத்தை மறந்து விட்டு அன்னிய நாட்டினரின் திராவிடக் கலாசாரத்தை புகுத்த நினைக்கிறார்கள் என்று வசைபாடி வருகிறார்கள் நெட்டிசன்கள்.


Share it if you like it