பாரதப் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நன்றி..!

பாரதப் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நன்றி..!

Share it if you like it

சென்னையில் கனமழை ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்.

சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கும் நிலைக்கு, தமிழகத்தில் சில பகுதிகளில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இதனை தொடர்ந்து பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா அவர்கள் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டாதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

அதனை தொடர்ந்து பாரதப் பிரதமர் மோடி தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் தொலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு மாநிலத்தின் நிலையை குறித்து பேசியதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். தமிழக மக்களின் நிலை குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தியதற்கும், மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமர் தெரிவித்ததற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்து உள்ளார்.


Share it if you like it