நடிகர் சூர்யா வழங்கியது தனது சொந்த பணம் அல்ல, நன்கொடையாக வந்த பணத்தை தன்னுடைய, திரைப்பட விளம்பரத்திற்கு பயன்படுத்தி கொண்டார் – பகீர் கிளப்பிய பிரபல அரசியல் விமர்சகர்..!

நடிகர் சூர்யா வழங்கியது தனது சொந்த பணம் அல்ல, நன்கொடையாக வந்த பணத்தை தன்னுடைய, திரைப்பட விளம்பரத்திற்கு பயன்படுத்தி கொண்டார் – பகீர் கிளப்பிய பிரபல அரசியல் விமர்சகர்..!

Share it if you like it

பிரபல நடிகர் சூர்யா தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஒரு கோடி ரூபாய் வழங்கியது. தனது சொந்த பணம் அல்ல என பிரபல அரசியல் விமர்சகர் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் நடிகர் சூர்யா அண்மையில் நடித்து வெளியாகி திரைப்படம் ’ஜெய் பீம். தமிழக முதல்வர் ஸ்டாலின் சூர்யாவின் நடிப்பிற்கும், திரைப்பட குழுவிற்கும் தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா முதல்வரை சந்தித்து, பழங்குடி சமுதாய மக்களின் மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாய் வழங்கி இருந்தார். இதற்கு பிரபல அரசியல் விமர்சகர் சூர்யாவிடம் சில கேள்விகளை முன் வைத்து தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்து உள்ளார்.

இந்த பழங்குடி இருளர் சமூகத்திற்கு 1 கோடி நன்கொடை கொடுத்ததில் ‘திராவிடத்தனம்’ பண்ணியிருக்கார். அந்த 1 கோடி சூர்யாவின் சம்பள பணமோ, 2D தயாரிப்பு நிறுவனத்தின் சொந்த பணமோ அல்ல. சரியான குழந்தைகளை தேர்ந்தெடுத்து தன்னார்வலர்கள் துணையுடன் சிறப்பான முறையில் படிக்க வைப்பார் என்று பொதுமக்கள் அகரம் அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்த பணத்தை சூர்யா தன்னுடைய திரைப்பட விளம்பரத்திற்கு பயன்படுத்தி கொண்டார்.

சோலையில் இருக்கும் ‘PAZHANKUDI IRULAR EDUCATIONAL TRUST’ என்ற பெயரில் NGO அரசு இணைய தளத்தில் இல்லை. இது புதிதாக தொடங்கபட்டதா? இன்னும் பதிவு செய்யபடவில்லையா ?அதன் நிர்வாகிகள் யார் யார் ? போன்ற பல சந்தேகங்கள் எழுகிறது, இதை சூர்யா தெளிவு படுத்த வேண்டும். மேலும்,IRULAR என்ற வார்த்தை பெயரில் கொண்ட அறக்கட்டளை இந்தியாவில் எங்கும் இல்லை. அகரம் பவுன்டேசன் நிர்வாகி TJ ஞானவேல் தான் ஜெய் பீம் படத்தின் இயக்குனர் என்பது கூடுதல் தகவல். இவர் வேறு Studio Green ஞானவேல்ராஜா வேறு.


Share it if you like it