சீன அதிபர் திட்டமிட்டே இந்திய எல்லையில் மோதல் போக்கை உருவாக்கி வருகிறார்..! சீன ஊடகம் அதிர்ச்சி தகவல் – மெளனம் காக்கும் தோழர்..!

சீன அதிபர் திட்டமிட்டே இந்திய எல்லையில் மோதல் போக்கை உருவாக்கி வருகிறார்..! சீன ஊடகம் அதிர்ச்சி தகவல் – மெளனம் காக்கும் தோழர்..!

Share it if you like it

இந்திய எல்லை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக சீனா தொடர்ந்து, தொல்லையை கொடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரபல ஊடகம் ஒன்று சீன அதிபர் மீது பகீர் குற்றச்சாட்டை சுமத்தி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளால் தற்பொழுது அதிகம் வெறுக்கப்படும் நாடாக சீனா மாறியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. நாடு பிடிக்கும் ஆசையுடன் 14 நாடுகளுடன் கடல் மற்றும் நிலபரப்பில் தொடர்ந்து எல்லை பிரச்சனையை உருவாக்கி வருகிறது. ஆசியாவின் நம்பர் 1 நாடாக சீனா மட்டுமே இருக்க வேண்டும் என்பதே ஜி ஜின்பிங்-கின் பேராசை.

இதற்கு பெரும் தடையாக உள்ள ஒரே நாடு இந்தியா என்பதை நன்கு உணர்ந்துள்ள சீனா, தொடர்ந்து பாரத தேசத்திற்கு தொல்லை கொடுக்கும் விதமாக, தனது அடிமை நாடான பாகிஸ்தான் மூலம் தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ செய்வது. இந்தியாவிற்குள் வாழ்ந்து கொண்டே தேசத்திற்கு எதிராக பேசும் பத்திரிக்கையாளர்கள், நெறியாளர்கள், ஊடகவியலாளர்கள், சில்லறை போராளிகள், திருமுருகன் காந்தி, அருணன், போன்றவர்களை சீனா மறைமுகமாக தூண்டி விடுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் திட்டமிட்டு இந்தியாவுடன் எல்லையில் மோதல், போக்கை மேற்கொள்வதாக சீனாவின் அதிகாரப்பூர்வ அரசு ஊடகமான Xinhua ஒப்புதல் அளித்து இருப்பது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியையும், சீனாவிற்கு முட்டு கொடுக்கும் உள்ளூர் போராளிகள் கள்ள மெளனமாக இருப்பதன் மூலம் இவர்களின் உண்மையான சுயரூபம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.


Share it if you like it