வந்தே பாரத் ரயில்… ஐ.சி.எஃப். அதிரடி!

வந்தே பாரத் ரயில்… ஐ.சி.எஃப். அதிரடி!

Share it if you like it

சென்னை ஐ.சி.எஃப்- முதன்முறையாக 8 பெட்டிகள் கொண்ட அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சென்னை ஐ.சி.எஃப். அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் முக்கியமான வழித்தடங்களில் 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், தூங்கும் வசதி வந்தே பாரத் ரயில், சரக்கு வந்தே பாரத் ரயில் உட்பட 4 வகைகளில் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, 2023-24-ம் உற்பத்தியாண்டில், சென்னை ஐசிஎஃப்-பில் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இவற்றில், சிலவற்றில் 8 பெட்டிகள் கொண்ட ரயில்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன.

8 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 4 பெட்டிகளில் மோட்டார் வாகனம் பொருத்தப்படும். சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் ஆகியவை ஒருங்கிணைக்கப்படும். ரயில் ஓட்டுநர் அறை நவீன முறையில் வடிவமைக்கப்படும். இம்மாத இறுதிக்குள் முதல் வந்தே பாரத் ரயில் தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளோம் என கூறியுள்ளார்.


Share it if you like it