கோஹினூர் வைரம்… மத்திய அரசு அதிரடி!

கோஹினூர் வைரம்… மத்திய அரசு அதிரடி!

Share it if you like it

கோஹினூர் வைரம் மற்றும் பழங்கால கோயில் சிலைகளை இங்கிலாந்தில் இருந்து மீட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

லண்டனில் வெளியாகும் டெய்லி டெலகிராஃப் நாளிதழின் செய்தியில், சுதந்திரத்திற்கு முந்தைய காலனியாதிக்க ஆங்கிலேயர் ஆட்சியில் பறிபோன கலைப்பொருட்களை இந்தியா திருப்பி அனுப்புமாறு கேட்கத் திட்டமிட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இது பிரதமர் மோடியின் முன்னுரிமைத் திட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்றும், இரு நாடுகளுக்கு இடையே ராஜதந்திர மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தைகளின் போது இதுகுறித்து பேசப்படலாம் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதற்காக இங்கிலாந்து முழுவதும் உள்ள சிறிய அருங்காட்சியகங்கள், தனியார் கலைப்பொருள் சேகரிப்பாளர்கள் ஆகியோர் தாமாக முன்வந்து இந்திய கலைப்பொருட்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக டெய்லி டெலகிராப் குறிப்பிட்டுள்ளது.  


Share it if you like it