தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்ட திருத்தத்தை திமுக அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்து இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்து இருந்தது திமுக. இந்த நிலையில் உங்கள் மசோதாவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று நேற்றைய தினம் (3.2.2022) ஆளுநர் தமிழக அரசிற்கு திருப்பி அனுப்பி இருந்தார். அந்த வகையில் பிரபல ஊடகமான புதியதலைமுறை நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்.. என்ன நினைக்கறீர்கள்? என்று கேள்வி எழுப்பி இருந்தது.
8,264 பேர் இந்த கருத்து கணிப்பில் கலந்து கொண்டனர். ஆளுநர் முடிவு சரியானதே என்று 63% மக்கள் வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.