திராவிட மாப்பிள்ளையின் ஒரே ஒரு வாட்ச்சின் மதிப்பு மட்டும்  14 கோடியாம்?

திராவிட மாப்பிள்ளையின் ஒரே ஒரு வாட்ச்சின் மதிப்பு மட்டும் 14 கோடியாம்?

Share it if you like it

சபரீசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அணிந்திருக்கும் உடை, காலணி, கைகடிகாரத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என பிரபல அரசியல் விமர்சகர்களான சவுக்கு சங்கர், மாரிதாஸ் வெளியிட்டுள்ளனர்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவர், அணிந்திருக்கும் கைகடிகாரத்தின் விலை 4 லட்சத்திற்கு மேல் இருக்கும் என தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். இதனால், இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. இதனிடையே, பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர். இவர், ஆதன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சபரீசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அணிந்திருக்கும் கைகடிகாரத்தின் மதிப்பு என்னவென்பதை நெறியாளர் மாதேஷிடம் இவ்வாறு கூறினார் ;

ஸ்டாலின் மருமகன் சபரீசன் வைத்திருக்கும், ரிச்சர்ட் மில் 56 – 02 இந்த ஒரு கைகடிகாரத்தின் மதிப்பு மட்டுமே 14 கோடி. ராயல் ஓக் கைகடிகாரம் நான்கு வைத்து இருக்கிறார். ஒரு கைகடிகாரத்தின் மதிப்பு மட்டும் ஒன்னே கால் கோடி இருக்கும். நான்கு, வாட்ச்சின் மதிப்பு என்னவென்பதை நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள். ரோஸ் கோல்ட் என்ற பெயரில் இரண்டு கைகடிகாரம் வைத்து இருக்கிறார். ஒரு வாட்ச்சின் மதிப்பு ஒரு கோடி. உதயநிதி ஸ்டாலினின் வாட்ச்சின் பெயர் புல்கேரி இதன் மதிப்பு ரூ. லட்சம். இவர்கள் அண்ணாமலை வாட்ச் பற்றி பேச தகுதி இருக்கிறதா? என காட்டமாக கூறியுள்ளார்.

ஆதாரம் இதோ.

இதனிடையே, அரசியல் விமர்சகர், பேச்சாளர், எழுத்தாளர் என பன்முக தன்மை கொண்டவர் மாரிதாஸ். இவர், சபரீசன் தம்மிடம் வைத்திருக்கும் வாட்ச், காலணி, பெல்ட், உடை, மிதி வண்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை பட்டியலை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it