ஹிந்து மாணவர்கள் விபூதி, பொட்டு வைக்க தடை: தலைமை ஆசிரியை அராஜகம்… பெற்றோர் முற்றுகை!

ஹிந்து மாணவர்கள் விபூதி, பொட்டு வைக்க தடை: தலைமை ஆசிரியை அராஜகம்… பெற்றோர் முற்றுகை!

Share it if you like it

ஹிந்து மாணவ, மாணவிகள் விபூதி, பொட்டு வைக்கக் கூடாது என்று பள்ளி தலைமை ஆசிரியை கூறியதால், அப்பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஹிந்துக்களுக்கு எதிராக பல்வேறு சம்பவங்கள் அரங்கேறுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக, ஹிந்து கோயில்களை இடிப்பது, ஹிந்து மத சடங்கு சம்பிரதாயங்களை இழிவாக விமர்சித்து பேசுவது, இந்து கோயில்களின் வருமானத்தை எடுத்து பிற தேவைகளுக்கு பயன்படுத்துவது உட்பட பல்வேறு ஹிந்து விரோத செயல்களில் ஈடுபடுவார்கள். இதனால்தான், தி.மு.க.வை ஹிந்து விரோத கட்சி என்று ஹிந்துக்கள் அழைத்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் ஹிந்து விரோத தி.மு.க. அரசு, ஹிந்து மாணவ, மாணவிகள் விபூதி, குங்குமம், பொட்டு வைக்கக்கூடாது என்று அரசுப் பள்ளிகளுக்கு உத்தரவிட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கஸ்தூரி ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண்மணி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில், பள்ளிக்கு விபூதி, குங்குமம் மற்றும் பொட்டு அணிந்து வந்த மாணவ மாணவிகளை, மேற்கண்ட தலைமை ஆசிரியை அழைத்து கண்டித்திருக்கிறார். இதையடுத்து, மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், மேற்கண்ட பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியையை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். அப்போது, அந்த தலைமை ஆசிரியை விபூதி பூசக்கூடாது, பொட்டு வைக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதாகவும், அந்த உத்தரவு நகலை நோட்டீஸ் போர்டில் ஒட்டி இருப்பதாகவும் பெற்றோரிடம் தெரிவிக்கிறார்.

மேலும், இதுகுறித்து மாணவர்களுக்கு தான் ஏற்கெனவே அறிவுறுத்தி இருப்பதாகவும், அதையும் மீறி மாணவர்கள் விபூதி, பொட்டு வைத்து வந்ததால் கண்டித்ததாகவும் கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், அந்த தலைமை ஆசிரியரிடம் முறையிடுகின்றனர். ஆனால், அவர் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தான் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் தி.மு.க. அரசின் ஹிந்து விரோத போக்கை கண்டித்து வருகின்றனர். மேலும், முஸ்லீம் மாணவிகள் பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு அனுமதி அளிக்கும் தி.மு.க. அரசு, ஹிந்து மாணவ, மாணவிகள் மட்டும் விபூதி, குங்குமம், பொட்டு வைக்கக் கூடாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

தவிர, புர்கா அணிந்து வந்த மாணவிகளிடம், வகுப்பறைக்குள் புர்கா அணியக் கூடாது என்று சொன்ன ஆசிரியரை தி.மு.க. அரசு உடனடியாக பணியிட மாற்றம் செய்தது. அதேபோல, விபூதி, குங்குமம் வைக்கக் கூடாது என்று சொன்ன ஒட்டன்சத்திரம் கஸ்தூரி ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். மேலும், பள்ளிகள் முதல் அரசு அலுவலகங்கள் வரை ஹிந்து விரோத போக்குதான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்களில் இருந்து ஹிந்து தெய்வங்களின் போட்டோக்கள் அகற்றப்பட்டிருக்கிறது. அதேசமயம், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய வழிபாடு தொடர்பான போட்டோக்கள் அகற்றப்படவில்லை. அப்படியானால், ஹிந்துக்களுக்கு ஒரு நியாயம், மற்ற மதத்தினருக்கு ஒரு நியாயமா என்று தி.மு.க. அரசு வசைபாடி வருகின்றனர்.


Share it if you like it